நான் காதலுக்காக வழக்காடுகிறேன்..!


காதல் !
இதய ரோஜாச் செடியில் 
இந்த
ஓற்றைப் பூப் பூத்துவிட்டால்
ஆத்தனை முட்களும்
ஊதிர்ந்து போகின்றன


வாலிபம் ஏந்திப்பார்க்கும்
திருவோடும் இதுதான்
வாலிபம் சூட்டிப்பார்க்கும்
கிரீடமும் இதுதான்


...............
முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை
இப்போதோ –
மௌனத்திற்கு கூட 
உரையெழுத முடிகிறது


காதல்
காதுகுடைந்து போட்ட
கோழிஇறகுங்கூட
மயிலிறகுக்கான 
மரியாதைக்குரியது


...............
இலக்கிய வாசலில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்
சமூக வாசல்களில்
எச்சிலால் அல்லவா
அர்ச்சிடப்படுகிறது?


அமராவதிகளும், அனார்கலிகளும்
லைலாக்களும், தேவதாஸ்களும்
காதல் பிச்சை
கேட்டு கேட்டு…
மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்


-வைரமுத்து (1977)
(நான் காதலுக்காக வழக்காடுகிறேன் - கவிதையில் எனக்குப் பிடித்த சிலபகுதிகள்..)


கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை..!


தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும் 
துப்பப்பட்டவனே.!


மரணத்தின் கற்பப்பையில்
கலைந்து போனவனே
நீ செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்…
.......
ஊயிர் என்பது
ஊருதுளி விந்தின் 
புpரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
.......
பூமியைக் 
கைவிடப்பாப்பவனே
பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா


காற்று உன்னை மட்டும் 
விட்டுவிட்டு வீசியதா?
தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது நிறுத்திக்கொண்டதா?


பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?


தன் சிகரங்களில் வநிக்க
வாழ்க்கை உன்னை 
வரவேற்கிறது.


நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோன்டுகிறாய்?
…….
அதோ பார்


அபாயம் அறிந்தால்
அங்கலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஏன்?


பறவாய் இருந்தும் 
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே ஏன்?


மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?


வலையறுந்த நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?
வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்.
…….
தம்பீ


சாவைச் 
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
புரிந்துகொள்


சுடும் வரைக்கும்
நெருப்பு 
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்


நீ மனிதன்.


           -வைரமுத்து (1989)


*****  *****  *****  ***  *****  *****  *****

என்னுயிர் சீசர்..!



வாலிலே நன்றி சொல்லும்
வாயிலே பிள்ளை யாகும்
காலிலே அன்பு காட்டும்
கண்னிலே உறவு காட்டும்;:
வேலினால் தாக்கி னாலும்
வீட்டில்தான் விழுந்து சாகும்!

என்னுயிர் சீசர்க் கேநான்
எஜமானி யல்ல தோழி!


*****  *****  *****  ***  *****  *****  ***** 

கறுப்பு நிலா..!




கண்ணகியே தாயே
கறுப்பான இரும்பிடையே………

உள்ளபடி உன்வாழ்க்கை உலகுக் குதவாத
செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்
உண்ணுகின்ற சோற்றில் உமியொட்டி இருத்தல்போல்
பொன்மகளே உன் வாழ்வும் புழுதி படிந்ததென்பேன்

தொட்டு மாலையிட்டோர் தோகையரைக் கூடியபின்
விட்டுப்பிரிந்து வேறுதிசை போனாலும்
கண்ணீரைத் தினம் சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்
பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே
இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்
சுந்தையிலும் விலைபோகாச் சரக்காகிப் போகட்டும்

கட்டில் சுகம்காணக் காளையவன் செலும்போதே
தட்டிக் கேட்டிருந்தால் தவறியிருப்பான?
பெட்டிப் பாம்பாகப் பேசா திருந்ததுதான்
கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

அளவாக தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
அளவுக்கு மீறிவிட்டால அதனை நெருப்பென்போம்
அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்கு போனதம்மா காத்துவைத்த உன்சொத்து

மேகக் கதையதனை முடித்தவிட்டே உன் கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
“சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ?” என்றுனது வாய்நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி சுவையொழுக சிலம்புதனை
அன்னவனின் கைமீது அளிக்கத் துணிந்தாயே

பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை உண்மையிலே
பித்தம் பிடித்தள்;நீ பேதை பெரும்பேதை
அநியாயக் காரனுக்கே ஆரத்தி எடுத்தவள் நீ
கனியென்றே எண்ணி கருங்கல்லைக் கடித்தவள் நீ

தாய்க்குலமே தாய்க்குலமே தங்கமகன் சொல்லுகிறேன்
வாய்ச்சாலக் காரனென்றென் வார்த்தையினைத் தள்ளாதீர்
கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்
மற்றவற்றில் அந்த மடமகளை மறந்திடுங்கள்….

                                            -வைரமுத்து (1971)
(கறுப்பு நிலா- கவிதையில் எனக்குப் பிடித்த சிலவரிகள்..)




*****  *****  *****  ***  *****  *****  ***** 

விலங்கு




மனிதா
விலங்கை வணங்கு
குறிப்பாக
குரங்கை கும்பிடு
உன் மூதாதைக்கு
முதல் வணக்கம் போடு


ஒவ்வொரு விலங்கும்
உன் ஆசான்


***
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை


யானையின் காலில்
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை
கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை


ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை


***
காட்டுக்குள்
மூட நம்பிக்கையில்லை
அங்கே
நெருப்புக் கோழி கூடத்
தீமிதிப்பதில்லை


***
மனிதா
நீ என்னதான் ஒப்பனைசெய்
மனிதஜாதியில் பெண்தான் அழகு


ஆன்களில் அழகு வேண்டுமா?
விலங்கைத் தவிர வேறுவழியில்லை
மான்களில் கொம்பு கலைமானுக்கு
யானையில் தந்தம் களிற்றுக்கு
மயில்களில் தோகை ஆன் மயிலுக்கு
கோழியில் கொண்டை சேவலுக்கு


ஆண் ஜாதிக்கு மரியாதை
நாட்டுக்குள் இல்லை மனிதா
காட்டுக்குள்தான்.


***
மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?


ஒரு கடவுள் - காளை கொண்டான்
ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான்
ஒரு கடவுள் - கருடன் கொண்டான்


எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவான்னென்று
கடவுளுக்குத் தெரியாதா?


மனிதன் கடவுளை நம்புகிறான்
கடவுள் மனிதனை நம்பவில்லை


***
விலங்குளை நேசியுங்கள்
அவை
அன்புக்கு ஏங்கும்
ஐந்தறிவு குழந்தைகள்


                                -வைரமுத்து (1996)



*****  *****  *****  ***  *****  *****  *****  

♥ நீயே ஒரு கவிதை - அம்மா ♥


அம்மாவை பற்றி கவிதையா 
நிச்சயமாக முடியாது என்னால் 
காதலை பற்றி எழுத 
ஒரு காகிதமும் 
சில பொய்களும் போதும்...! 
அம்மா உன்னை பற்றி 
எழுத உலகத்தில் உள்ள 
அணைத்து காகிதங்களும் பத்தாது 
என்னை பொறுத்தவரை 
கடவுளை நான் நம்ப காரணமே 
எதை எதையோ படைத்த அவன் 
அம்மாவையும் படைததர்க்காகதான்..! 
அம்மா 
நான் சொன்ன 
முதல் வார்த்தை.. 
எல்லோரும் சொல்லும் 
முதல் வார்த்தை... 
..மா அம்மா 
நாங்கள் அன்றே 
சொன்ன முதல் கவிதை அம்மா..!

*****  *****  *****  ***  *****  *****  ***** 

உன்னோடு நான் இருந்த ....!



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே..! 
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான் 
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கனக்குதடி..!


பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்..!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் 
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்..!


எத்தனையோ ஆண்டுகளின் இடைவெளியை
இறுக்கி குறைக்கின்ற எத்தனத்தில் சிலநிமிடம்..! 
கண்ணேடும் மூக்கோடும் கன்னக் கதுப்போடும்
அடையாளம் காணும் ஆனந்தம் சிலநிமிடம்..!


இந்த விழிதானே என்னுயிரைத் தின்றவிழி
இந்த முகம்தானே என்கனவில் தோன்றும்முகம்..!
இந்த கரம்தானே எட்டாமல் போனகரம்
இந்த விரல்தானே இல்லையென்று போனவிரல்..!


இந்த குழல்தானே இதயத்தை இழுத்தகுழல்
இந்த எழில்தானே என்னைஎழுத வைத்தஎழில்..!
ஒவ்வொன்றாய் தொட்டு உயிர்வீங்க  முத்தமிட்டு
செவ்வாயின் ஓரம்வரச் சிதறியதே என்ஆவி..!


பேசாமல்போன பெருங்காதல் அத்தனையும்
கூசாத வார்த்தைகளால் கொட்டிவிட தோன்றியதே..!
நில்லென்று சொல்லும் நீலமணிக் கண்ணுக்குள்
சில்லென்று குதித்துச் செத்துவிடத் தோன்றியதே..!


கண்கள் துடித்ததிலே காதல் தெரிந்ததடி
கைகள் நடுங்கியதில் காமம் புரிந்ததடி..!
காதலைத் தண்டிக்கக் காலம் பிடித்ததடி
காலத்தைக் தண்டிப்போம் கண்ணே வளைந்துகொடு..!


எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை 
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை..!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை..!


அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் 
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய்..!
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் 
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி..!


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே..!
                                    
                                                                      -வைரமுத்து(1995)


*****  *****  *****  ***  *****  *****  ***** 

காதலித்துப் பார்..!





காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !


தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!


இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!


             -வைரமுத்து(1989)


*****  *****  *****  ***  *****  *****  ***** 

நினைவு நாள்..!!






உன்னைச் சந்தித்த
நாளில் இருந்து...


உன் நினைவு இல்லாத நாள்
என் நினைவில் இல்லை
உன் நினைவு இல்லாத நாள்
ஒன்று இருந்தால்
அன்று……
என் நினைவு நாள்..!!

 *****  *****  *****  ***  *****  *****  ***** 

உன் நினைவு..!






நான் உயிரோடு
உள்ள வரை….
உன் நினைவோடு
கலந்து இருப்பேன்
இல்லை
உன் நினைவாலே
கரைந்து இறப்பேன்..!!

*****  *****  *****  ***  *****  *****  *****  

நேசிக்கவில்லை…! சுவாசிக்கின்றேன்!!






சுவாசம் இன்றி
உயிர்வாழவும் இயலாது
நீ இன்றி - நான்
வாழவும் இயலாது


காரனம்
உன்னை - நான்
நேசிக்கவில்லை..…
உன்னை தான்
சுவாசிக்கின்றேன்..…

 *****  *****  *****  ***  *****  *****  ***** 

இறந்து விடுவேன்…!!




காதலிக்க தெரிந்த எனக்கு
என் காதலை அவனிடம்
சொல்லத் தெரியவில்லை


நேசிக்கத் தெரிந்த எனக்கு
அவன் நினைவின்றி
சுவாசிக்கத் தெரியவில்லை


என் உயிர் இல்லாமல்
இருக்க சொன்னால் கூட
இருந்து விடுவேன்…!


உன் நினைவில்லாமல்
இருக்கச் சொன்னால்
இறந்து விடுவேன்…!!

 *****  *****  *****  ***  *****  *****  ***** 

Design by WPThemesExpert | Blogger Template by Blogger Templates Gallery